பேச முடிந்தும் ஊமையாக இருந்த
தருணங்கள் எத்தனையோ..
பார்வை இருந்தும் பார்க்காதது போல் சென்ற
நிமிடங்கள் எத்தனையோ...
அதுபோல், உறவுகள் இருந்தும் அனாதையாய்
கடந்த காலங்கள் எத்தனையோ...
இன்று அந்த நிலை இல்லை என்னில்...
உனக்கு உயிர் கொடுத்த தாய் நானில்லை...
எனக்கு உயிராய் பிறந்த சேய் நீ...
என்னை பெற்றெடுத்த என் தாயும்
எனது கருவில் பிறந்த என் சேயும் எனது இரு தெய்வங்கள்.
இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றுதான்...
என் ஆயுளையும் என் மகளுக்கு கொடுத்துவிடு என்று.
எனது சோகத்தின் மருந்து நீ
சுமைகளின் சுமைதாங்கி நீ
என் சிரிப்புக்கு சொந்தக்காரி நீ
நான் வாழும் காலம் முழுதும் உன் சேயாக வேண்டும்
என் செல்ல மகளே....
super
ReplyDelete