உன்னை எங்கே என தேடும் என் கண்களுக்கு தெரியவில்லை
காணும் அனைத்திலுமே நீ கலந்தவன் என்று....
உன் குரலை கேட்க துடிக்கும் என் காதுக்கும் தெரியவில்லை
நான் பேசும் மொழியே உன்னுடையது என்று.
உன் மடி சாய நினைக்கும் இந்த சிந்தைக்கும் தெரியவில்லை
நீ என்னுள்ளே நிறைந்தவன் என்று....
ஒவ்வொரு முறை சுவாசிக்கும் என் மூச்சு காற்றுக்கு தெரியும்
என் சுவாசமே நீ தான் இன்று ...
பிரிவுகளை மறக்க நினைவுகளை கொண்டு வாழும் உலகில்.
உன் நினைவுகளால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் நான்...
மண் சேரும் முன்னே உன் மடி சேர்வேன் என்ற நம்பிக்கையில்.
காணும் அனைத்திலுமே நீ கலந்தவன் என்று....
உன் குரலை கேட்க துடிக்கும் என் காதுக்கும் தெரியவில்லை
நான் பேசும் மொழியே உன்னுடையது என்று.
உன் மடி சாய நினைக்கும் இந்த சிந்தைக்கும் தெரியவில்லை
நீ என்னுள்ளே நிறைந்தவன் என்று....
ஒவ்வொரு முறை சுவாசிக்கும் என் மூச்சு காற்றுக்கு தெரியும்
என் சுவாசமே நீ தான் இன்று ...
பிரிவுகளை மறக்க நினைவுகளை கொண்டு வாழும் உலகில்.
உன் நினைவுகளால் மட்டுமே உயிர் வாழ்கிறேன் நான்...
மண் சேரும் முன்னே உன் மடி சேர்வேன் என்ற நம்பிக்கையில்.
